உருவாய் அருவாய் உளதாய் இலதாய்
மருவாய் மலராய் மணியாய் ஒளியாய்க்
கருவாய் உயிராய்க் கதியாய் விதியாய்க்
குருவாய் வருவாய் அருள்வாய் குகனே.
========================================
விளக்கம்:
உருவாகவும், அருவாகவும், அன்பர்க்கு உள்ள பொருளாகவும், அன்பர் அல்லார்க்கு இல்லாத பொருளாகவும், ஞானம் ஆன நறுமணப் பொருளாகவும், அம்மனத்தின் மூலமாகன மலராகவும், ஒன்பது மணிகளாகவும், மணியின் ஒளியாகவும், அனைத்துக்கும் மூலப் பொருளாகவும், உயிருக்கு உயிராகவும், வீடு பேற்றினை அடையும் நன்னெறியாகவும், அதனால் பெறப்படும் வீடு பேறாகவும் விலங்கிடும் குகப்பெருமானே! குருவாக எழுந்தருளி வந்து எம்மைக் காத்தருள்வீர்! என்று குகப் பெருமானை வேண்டிக் கொள்கிறார்.
letchumanan valarga umathu thamizh thondu..
ReplyDelete