Sunday, February 15, 2009

செய்யுள் - படிவம் 3 ( அறநெறிச்சாரம் )

அறநெறிச்சாரம் - ஒளவையார்

1. எப்பிறப் பாயினும் ஏமாப் பொருவற்கு
மக்கட் பிறப்பில் பிறிதில்லை - அப்பிறப்பில்
கற்றலும் கற்றவை கேட்டலும் கேட்டதன்கண்
நிற்றலும் கூடப் பெறின்.

விளக்கம்:
உலகின் எல்லாப் பிறப்புகளையும் ஒப்பிட்டுப் பார்க்கையில் மனிதப்
பிறப்பைவிடச் சிறந்த பிறப்பு வேறொன்றுமில்லை. அத்தகைய சிறப்பு
வாய்ந்த பிறப்பில் கற்கவேண்டியவற்றைக் கற்க வேண்டும். கற்றறிந்த
அறிஞர்களின் அரிய கருத்துகளைக் கேட்க வேண்டும். கேட்ட பிறவியின்
பயனை அடைய வழிவகுக்கும்.

No comments:

Post a Comment