Sunday, February 15, 2009

திருக்குறள் - படிவம் 3

1. குணம்நாடிக் குற்றமும் நாடி அவற்றுள்
மிகைநாடி மிக்க கொளல். ( 504 )


விளக்கம்:
ஒருவனுடைய குனங்களை ஆராய்ந்து, பிறகு குற்றங்களையும் ஆராய்ந்து,
மிகுந்திருப்பவற்றால் அவனைப்பற்றித் தெரிந்து கொள்ள வேண்டும்.

கருத்து:
ஒருவரின் குணநலன்களை ஆராய்ந்து அவர் எத்த்கையோர்

எனத் தீர்மானம் செய்யலாம்.


2. விரைந்து தொழில்கேட்கும் ஞாலம் நிரந்தினிது
சொல்லுதல் வல்லார்ப் பெரின். ( 648 )

விளக்கம்:
கருத்துகளை முறையாகவும் இனிமையாகவும் சொல்லும் வல்லவரைப்
பெற்றால் உலகத்தார் அவர்கள் சொன்ன வேலையை உடனே செய்வார்கள்.

கருத்து:
இனிமையாகப் பேசக்கூடியவர் இடும் வேலையைப் பிறர் உடனே செய்வர்.

3. சொல்லுதல் யார்க்கும் எளிய அரியவாம்
சொல்லிய வண்ணம் செயல். ( 664 )

விளக்கம்:
ஒரு செயலைச் செய்து முடித்துவிடுவதாகச் சொல்வது எல்லாருக்கும்
சுலபமானது. ஆனால், அதனைச் சொன்னபடி செய்வதுதான் கடினமானது.

கருத்து:
சொன்னப்டி நடக்க வேண்டும்; விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டும்.

No comments:

Post a Comment