Tuesday, March 10, 2009

பழமொழி - படிவம் 2

1. அடாது செய்பவன் படாது படுவான்

விளக்கம்:
தகாத செயல்களைச் செய்பவர்கள் அதற்குரிய தண்டனைகளைப் பெற்றே தீருவர்.

2. தொட்டிற் பழக்கம் சுடுகாடு மட்டும்

விளக்கம்:
ஒருவர் இளமையில் கைகொள்லும் பழக்கவழக்கங்கள் அவரின் வாழ்நாள் முழுவதும் இருந்து வரும்.

3. இக்கரை மாட்டுக்கு அக்கரை பச்சை

விளக்கம்:
தன்னிடமுள்ள ஒன்றின் சிறப்பினை உணராமல் பிறிதொன்றின் வெளித்தோற்றத்தில் மயங்கி அதனை உயர்வாகக் கருதுவதால் பயன் கிடையாது.

4. வெள்ளம் வருமுன் அணைபோட வேண்டும்

விளக்கம்:
வாழ்க்கையில் கவனத்துடன் நடவடிக்கைகளை மேற்கொண்டால் எதிர்வரும் துன்பங்களையோ இடர்களையோ தவிர்க்கலாம்.

5. மனம் உண்டானால் மார்க்கம் உண்டு

விளக்கம்:
ஒரு செயலை நிறைவேற்றுவதில் நம் மனமும் கவனமும் முழுமையாகப் பதியுமானால் அதனைச் செய்து முடிக்கும் வழிமுறைகளும் தானாகப் பிறக்கும்.